29 September 2015
27 September 2015
18 September 2015
இன்று மற்ற வலைதளங்களில் வெளியிடப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான செய்திக்கு மறுப்பறிக்கை வெளியீடு Copy the BEST Traders and Make Money (One Click) : http://ow.ly/KNICZ Copy the BEST Traders and Make Money (One Click) : http://ow.ly/KNICZ Copy the BEST Traders and Make Money (One Click) : http://ow.ly/KNICZ Copy the BEST Traders and Make Money (One Click) : http://ow.ly/KNICZ Copy the BEST Traders and Make Money (One Click) : http://ow.ly/KNICZ

16 September 2015
பி.எப். சந்தாதாரர்களுக்கு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்
பிராவிடண்ட் பண்டு சந்தாதாரர்களுக்கு என பிரத்யேகமாக புதியமொபைல் அப்ளிகேஷன் ஒன்றை மத்திய மந்திரி மந்தாருதத்தாத்ரேயா
இன்று துவங்கி வைத்தார். இதன் மூலம், எஸ்.எம்.எஸ். வழியாகயூ.ஏ.என். நம்பரை ஆக்டிவேஷன் செய்வது, மிஸ்டு கால் வழியாக
ஆக்டிவேட் செய்வது ஆகிய சேவைகளை பெறலாம். மேலும்,சந்தாதாரர்கள் மாதந்தோறும் தங்கள் கணக்குகளின் விபரங்களைமொபைல் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.
இதுதவிர, ஈ.பி.எப். பென்சன் பெறுபவர்கள் பென்சன் விபரங்களை
மொபைலிலேயே அறிந்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன்வாயிலாக சந்தாதாரர்கள் தங்களது பி.எப். இருப்பு தொகையையும்தெரிந்து
கொள்ளலாம். இந்த புதிய வசதியின் வாயிலாக 3.54 கோடிபி.எப்.
சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள்.
49.22 லட்சம் பென்சன்தாரர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒருவசதியாக இருக்கும். அதேபோல், 6.1 லட்சம் நிறுவனங்களுக்கும் இதுபயனுள்ளதாக இருக்கும் என
மத்திய மந்திரி தத்தாத்ரேயாதெரிவித்தார். இந்த அப்ளிகேஷனை
இ.பி.எப்.ஓ. இணையதளத்தில்இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
15 September 2015
11 September 2015
09 September 2015
today total news
Posted: 08 Sep 2015 07:52 PM PDT
|
Posted: 08 Sep 2015 07:51 PM PDT
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
இந்தத் தேர்வுக்கான புகைப்படம், கையெழுத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அனுமதிச் சீட்டில் ஏதேனும் தவறுகள் இருந்தால், வரும் 11-ஆம் தேதிக்குள் அதை தேர்வுப் பிரிவில் தெரிவித்து, குறைகளைச் சரி செய்து கொள்ளலாம். அந்தத் தேதிக்குப் பிறகு விவரங்களைத் திருத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
|
Posted: 08 Sep 2015 07:50 PM PDT
தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
இதை, பிற மாநிலங்கள் அனைத்தும் ஏற்று நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் நீடித்து வந்தது. மேலும், இந்தப் படிப்பில் நிகழாண்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாகி வந்தது.
இதனிடையே, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதும், மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையில், பி.எட், எம்.எட். படிப்புக் காலம் நிகழாண்டில் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகள்தான் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இதுகுறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், பி.எட். மாணவர் சேர்க்கை செயலருமான ஆர்.பாரதி கூறியது:
என்.சி.டி.இ. வழிகாட்டுதலின் படி, தமிழகத்திலும் நிகழாண்டு முதல் பி.எட். படிப்புக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து, உத்தரவிட்டுள்ளது. எனவே, நிகழாண்டில் பி.எட், எம்.எட். படிப்புகளில் சேரும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும்.
மேலும், பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
செப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
இதுதொடர்பான அறிவிப்பு கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.
|
Posted: 08 Sep 2015 07:49 PM PDT
சட்டப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.
இளநிலை சட்டப் படிப்புக்கான (எல்.எல்.பி.) மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 10-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
|
Posted: 08 Sep 2015 07:49 PM PDT
பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 22 ஆயிரம் குறைந்துள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்டம் சார்பில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த 2010-11-ஆம் ஆண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் 56,113 பேர் கண்டறியப்பட்டனர். 2015-16-ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 33,686-ஆகக் குறைந்துள்ளது.
வீடுவாரியாகக் கணக்கெடுப்பு, விழிப்புணர்வு முகாம், தரமானகல்வி போன்றவற்றின் மூலம் 100 சதவீத குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மென்பொருள் மூலம்... பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் அவரவர் வயதுக்கும், கற்றல் அடைவுத் திறனுக்கும் ஏற்ப மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.
அவ்வாறு மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள பிரத்யேக மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர்.
புகைப்படத்துடன்கூடிய மாணவர் விவரம், மாணவரின் பெற்றோர் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனரா, மாணவர் பள்ளிக்கு எத்தனை நாள்கள் வரவில்லை உள்ளிட்ட விவரங்கள் இந்த மென்பொருள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
அந்த மாணவர் 8-ஆம் வகுப்புத் தேர்ச்சிப் பெறுவது வரை அவரது கற்றல் விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2014-15-ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளில் 42,245 பேர் சிறப்புப் பயிற்சி மையம், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டப் பள்ளிகள், நேரடிச் சேர்க்கை ஆகிய வழிகளில் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இந்தக் குழந்தைகளின் கல்விக்காக ரூ.22 கோடி செலவிடப்பட்டுள்ளது
|
Posted: 08 Sep 2015 07:48 PM PDT
தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும்,
55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.
""மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது'' என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலாக உள்ளது.
|
Posted: 08 Sep 2015 07:21 PM PDT
|
Posted: 08 Sep 2015 10:10 AM PDT
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளையே இனி ஆசிரியர்களும், ஊழியர்களும் பயன்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. இது ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|
Posted: 08 Sep 2015 10:02 AM PDT
![]() |
Posted: 08 Sep 2015 09:53 AM PDT
கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட தலைமுறை இது!
சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் உள்ளடங்கிய ஒரு பள்ளி வழியாக எதற்கோ செல்ல வேண்டியிருந்தது. அந்த இடம் பரிச்சயமான சூழலாக மனத்தில் மின்னலடித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த எனக்கு இவ்வளாகம் எப்படிப் புழங்கிய பகுதியாக முடியும் என்ற எண்ணம் ஓடியது. என் மகள் எழுதிய ஒரு தேர்வுக்காக உடன் சென்ற நான், அங்கிருந்த மர நிழலில் முழு நாளும் காத்துக் கிடந்தது நினைவுக்கு வந்தது. நான் படித்த பள்ளிக்கூடத்துக்கே
என்னைச் சேர்க்கவோ, வகுப்பாசிரியரைச் சந்திக்கவோகூட என் அப்பா வந்ததில்லை. அரசு ஊழியரான அவர், துறைத் தேர்வு ஒன்றை எழுத வந்தபோதுதான் என் பள்ளி வளாகத்தை முதன் முதலில் பார்த்தார். அதுதான் வாழ்வில் ஒரே முறை. என் தலைமுறையிலோ நிலைமை தலைகீழ்.
மேல்நிலைக் கல்வி படித்தபோது தனிப் பயிற்சிக்காக மந்தைவெளியில் பறக்கும் ரயில் நிலையத்தின் அருகில் ஒரு நிறுவனத்தில் மகளைச் சேர்த்திருந்தேன். தானி ஏற்பாடு செய்யும்வரை தொடர்வண்டியில் போய் வந்தாள். விடியற்காலையிலும் மதிய வெயிலிலும் முன்னிர விலும் உடன் சென்றதும், நிலையம், நிறுவன வளாகங்களில் காத்திருந்ததும் எதற்கு எனத் தெரியவில்லை. நம் பொறுப்பைக் காட்டவும் படி என்று சொல்லாமல் அதை உணர்த்தவுமாக இருக்கலாம். இன்று நகர அப்பாக்கள் பலரும் இப்படித்தான் இயங்குகிறார்கள்.
தவச்சாலைகளான கல்விக்கூடங்கள்
தனிவிருப்பமாக மகள் படித்த இந்தி வகுப்பு வசித்த தெருவிலேயே அமைந்துவிட்டது. அதனால், தேர்வு மையத்துக்கும், சான்றிதழ் வழங்கு நிகழ்வுக்கும் மட்டும் செல்ல வேண்டியிருந்தது. சென்னையின் ராயப் பேட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தியாகராய நகரின் பல பள்ளிகள் காலை முதல் மாலைவரை தவச்சாலைகளாயின. மகளின் அயல் மொழி ஆர்வத்தில் திகைந்த ஜப்பான் மொழி பயின்ற இரு இடங்களும் பேருந்தில் செல்ல வேண்டிய தூரத்தில் அமைந்தன. குறைந்த தூரமேயானாலும் நெரிசல் நேரத்திலும், ஊர்வல காலத்திலும் சென்று திரும்பப் பல மணிநேரம் ஆகிவிடும். இவ்வகுப்புகள் மதியம் மற்றும் இரவுப் பொழுதில் நடைபெறுவன. எனக்கு அருகமைந்த உணவகங்களின் சிறப்புணவு பழக்கமானது, நூலகங்களின் ஊழியர்கள் ‘பரிச்சயமானார்கள்'.
பள்ளிக் கல்வி முடித்ததும் அடுத்தது என்ன என்பதில் இன்றைய சராசரித் தமிழருக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. முதலில் மருத்துவம். அடுத்து பல் மருத்துவம். அதற்கடுத்தது கால்நடை மருத்துவமும் விவசாயமும். நான்காவது பொறியியல். ஐந்தாமிடம் வணிகவியலுக்கு, ஆறாமிடம் அறவியல் பாடங்களுக்கு. இவை ஏதும் கிடைக்காதவர்களின் இறுதிப் புகலிடம்தான் கலைகள். முதல் மூன்று பிரிவுகளைத் தொட முடியாதவர்கள் நான்காவதை விட்டுக் கீழே இறங்குவதில்லை. அப்படி இறங்குவதை அவமானமாகக் கருதும் நிலைக்கு வந்துவிட்டது இன்றைய காலம்.
+2க்குப் பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றிப் பலர் அதற்கென இயங்கும் நிறுவனங்களை அணுகி ஆலோசனை கேட்பார்கள். அப்படி ஒரு அமைப்பை அணுகினேன். தேர்வு முடிவுகள் வெளிவர மூன்று வாரம் இருக்கும்போதே, அதன் தலைவரைப் போய்ப் பார்த்தேன். ‘என்ன இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்’ என்றார் அவர். ‘ஐயா, இன்னும் முடிவுகள் வெளிவரவில்லையே’ என்றேன் மெதுவாக. தேர்வு எழுதுவதற்கு முன்பே வர வேண்டும் என்றார். +2க்குப் பிறகான படிப்புகளுக்கு அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய பல கடைசித் தேதிகளை அப்போது நான் கடந்துவிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். அதிர்ந்துபோனேன்.
எங்களுக்கு அந்த நேரத்தில் தேர்வு வாய்ப்புகள் 10 இருந்தன. மகள் எல்லாவற்றையும் எழுதினாள். காலையில் கொட்டிவாக்கம் பள்ளியில் ஒரு மணிக்குத் தேர்வொன்று முடியும். அதே நாளில் மதியம் இரண்டு மணிக்கு டி.டி.கே. சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் இன்னொரு தேர்வு தொடங்கும். ஒரு மணி நேரத்தில் கொட்டிவாக்கத்திலிருந்து ராஜா அண்ணாமலைபுரம் வர வேண்டும். வாடகை உந்தியில் பள்ளி வாசலில் காத்திருந்து, தேர்வு எழுதிவிட்டு வெளிவரும் மகளை உள்ளே திணித்துக்கொண்டு வர முயன்றால், வாசலி லேயே நெரிசலில் வண்டி சிக்கிவிடும். எப்படியோ தப்பித்து 10 நிமிட தாமதத்தில் தேர்வறையை அடைந் தோம். வழியில் வாகன போஜனம். இப்படிப் பல நெருக்கடிகளைச் சந்தித்துப் பல தேர்வுகளை எழுதி முடித்தோம். இத்தேர்வுகள் எனக்கும் என் மகளுக்கும் பொது அறிவை வளர்த்தன. தவிர, வேறு பயன் விளையவில்லை.
மகள் வாங்கிய மதிப்பெண்ணுக்கு அரசு ஒதுக்கீட்டில் சுயநிதிக் கல்லூரியில் பல் மருத்துவம் கிடைத்தது. ஆனால் மகள் அதை விரும்பவில்லை. மொழியும் இலக்கியமும் இயல்பாகவே என் மகளுக்குப் பிடித்தவை. ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தாள். சென்னையின் சிறந்த கல்லூரியில் சேர்ந்தாள். அவள் தேர்வு எனக்கு வருத்தத்தைத் தரவில்லை.
கரையும் சேமிப்பு
இளங்கலை முடித்த பின் முதுகலைக்கான விண்ணப்பங்கள் அனுப்புவதை மகளே பார்த்துக்கொண் டாள். அதற்கான தேர்வுகளில் ஒன்று புதுச்சேரியில், மற்றொன்று டெல்லியில், மற்றவை சென்னையில். இந்தத் தேர்வுகளுக்கு மகளை அழைத்துப் போய் வருவது எங்களுக்கு ஒரு சுற்றுலா போலவே ஆகிவிட்டது. புதுச்சேரியில் எழுதிய தேர்வின் பயனால் இப்போது மகள் ஷில்லாங்கில் படிக்கிறாள். ஆகாய மார்க்கத்தில் சேமிப்பு கரைகிறது.
கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நகரவாசிகளுக்காவது வரத் தொடங்கியிருக்கிறது. எனினும் நாம் அடைய வேண்டிய தூரம் கண்ணுக்கு அப்பால் நீண்டிருக்கிறது. மயிலம் கிராமத்தில் படித்துக் கொண்டிருந்த நான், ஆறாம் வகுப்பை அருகமை நகரமான திண்டிவனத்தில் படிக்க விரும்பினேன். அப்பா மறுத்துவிட்டார். எங்கு படித்தாலும் படிக்கிறவர்கள் படிப்பார்கள்; படிக்காதவர்கள் எங்கு சென்றாலும் ஜொலிக்க மாட்டார்கள் என்று சொன்னார். நடுத்தர வர்க்கம், தன் பொருளாதார இயலாமையை மறைத்துக் கொள்ள இத்தகைய அறப் போர்வைகளைப் போர்த்திக் கொண்டு சுருண்டுவிடும்.
பொருளாதாரத்துடன் இணைந்த மத்திய அரசின் திட்டம் ஒன்றுதான் என்னை நகரத்துக்குக் கூட்டிவந்தது. கிராமத்தில் படிக்கும் சிறார்களில் சிறந்தவர்களை நகரத்தில் உள்ள தேர்ந்த பள்ளியில் சேர்க்கும் திட்டம் அது. ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் இயங்கும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் முதலிரு இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குப் போட்டித் தேர்வொன்றை வைத்து, அதில் இருவரைத் தேர்ந்தெடுத்து, நகரப் பள்ளியில் சேர்த்து, படிக்கும் செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். 97 பேர் பங்கேற்ற போட்டியில் இருவருள் ஒருவராகத் தேர்வுபெற்று கடலூருக்கு வந்து சேர்ந்தேன். போட்டித் தேர்வை எழுதிய திண்டிவனத்துக்கோ, படிக்கச் சென்ற கடலூருக்கோ அப்பா உடன்வரவில்லை. எட்டாவது படிக்கும்போதே பெற்றோர் உடன்வரவில்லை. ஆனால் நானோ பட்டப்படிப்புக்குப் பிறகும் கூடவே அலை கிறேன். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த தலைமுறை என்பது மட்டும் இதற்குக் காரணமாய்த் தோன்றவில்லை. பொருளாதார அன்பும் கூடுதல் காரணங்கள் என்று தோன்றுகின்றன. என் மகள் சொல்வாள் பெண் என்பதுதான் காரணம் என்று.
|
08 September 2015
04 September 2015
Posted: 04 Sep 2015 05:45 AM PDT
நாடு முழுவதும் செப்டம்பர் 5-ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவுகூறும் வகையில் ஆசிரியர் தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறோம்.
இந்நிலையில், நாளை கொண்டாடவிருக்கும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை கவுரவிக்கும்
விதமாக நினைவு நாணயம் ஒன்று இன்று வெளியிடப்பட உள்ளது.இந்த நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். மேலும் கலா உற்சவ் என்ற இணையதள சேவையையும் அவர் துவக்கி வைக்க உள்ளார். |
Posted: 04 Sep 2015 05:44 AM PDT
கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியருக்கான நான்கு பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய சிறை கண்காணிப்பாளர் பழனி வெளியிட்ட அறிக்கை:
கோவை மத்திய சிறையில், காலியாக உள்ள நான்கு இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு, ஆசிரியர் பட்டயப்படிப்புடன்,இரண்டு ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொதுப்போட்டி, இன சுழற்சிஅடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். பொதுப்பிரிவினருக்கு 30 வயதும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 32 வயதும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு, 35 வயது 2015 (ஜன.,1ன்படி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தகுதிகள் உடையவர்கள், உரிய கல்விச்சான்றிதழ், முன் அனுபவம்-ஜாதி-முன்னுரிமைச் சான்றிதழுடன், வரும் 18ம் தேதி காலை, 11:00 மணியளவில், கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளர், முன் ஆஜராக வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Posted: 04 Sep 2015 05:43 AM PDT
ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.அனைத்துவளமைய பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலர் ராஜ்குமார் தாக்கல் செய்த மனு:
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் (எஸ்.எஸ்.ஏ.,) கீழ் 4582 பேர் மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வளமைய பயிற்றுநர்களாக பணிபுரிகின்றனர்.தமிழக அரசு 2006 ல்,' ஆண்டுதோறும் 500 வட்டார வளமைய பயிற்றுநர்கள் பணி மூப்பு அடிப்படையில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்,
' என தெரிவித்தது. 2006 முதல் 2012 வரை அந்நடைமுறை பின்பற்றப்பட்டது. 2012--13 ல் 115 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமே, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அரசாணைப்படி ஆண்டுக்கு 500 வட்டார வளமைய பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். 385 வட்டார கண்காணிப்பாளர்களை முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்தது தவறு. எனவே, 2012--14 வரை 885வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க ஆசிரியர் தேர்வுவாரியம் 2014 ஜூலை 14 ல் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, ராஜ்குமார் மனு செய்திருந்தார்.
தனி நீதிபதி,' 885 வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிப்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என 2014 ல் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் கொண்ட அமர்வு உத்தரவு: ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில்,2015--16 ல்பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்;ஒப்புதல் கிடைத்ததும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அரசு 6 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனர். ராஜ்குமார் தரப்பு வழக்கறிஞர் சண்முகராஜா சேதுபதி ஆஜரானார்.
|
Posted: 04 Sep 2015 05:43 AM PDT
பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பணிபுரியும் பெண்களுக்கு தாய்மைஅடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது.
இதனால் ஏராளமானோர் தாய்மையடைவதைக்கூட தள்ளிப் போடுகின்றனர்.குழந்தை பிறந்த உடன் பணிக்குத் திரும்பும் பெண்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு ஏற்படுவதுடன், குழந்தைக்கும் தாயின் அறவணைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது. எனவே தற்போதிருக்கும் 3 மாத மகப்பேறு விடுமுறையை 8 மாதமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளோம் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கூடுதல் செயலாளர் நுதன் குகா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பரிந்துரையை பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். செயலாளர்கள் குழுவின் ஆலோசனைக்காக மத்திய அமைச்சரவை செயலகத்திடம்இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார். பிரசவத்திற்கு முன்பு இந்த 8 மாத விடுமுறை என்பது குழந்தை பிறப்பு நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தேவிடுமுறை எடுக்க வழிவகை செய்யும். குழந்தை பிறந்த பிறகு 7 மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும். அமைச்சரவை செயலகம் ஒப்புதல் அளித்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
|
Posted: 04 Sep 2015 05:41 AM PDT
![]() |
Posted: 04 Sep 2015 05:39 AM PDT
ராதாகிருஷ்ணன் விருதுக்கு இந்தாண்டு 377 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
மறைந்த முன்னாள் ஜானதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செம்படர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களை
தேர்வு செய்து, அவர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். தொடக்கப்பள்ளி - 201, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி - 134, மெட்ரிக் - 30, ஆங்கிலோ இந்தியன் பள்ளி - 2, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் - 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
|
Posted: 04 Sep 2015 05:39 AM PDT
|
Posted: 03 Sep 2015 06:28 PM PDT
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணினைச்சார்ந்த ஆசிரியர்கள் பலர் டாக்டர் ராதக்கிருஷ்ணன் விருது,மற்றும் தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அதனை எண்ணி பெருமிதம் அடைவதாகவும் பொதுசெயலர் மற்றும் மாநில நிர்வாகிகள் சேர்ந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விருதுபெ
தகவல்-கே.பி.ரக்ஷித்.மாநில துணைத்தலைவர்
|
Posted: 03 Sep 2015 06:31 PM PDT
இவ் வாண்டு ஆசிரியர்தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாக்கிருஷ்ணன் விருது மற்றும் தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் தமது நல்வாழ்த்துக்களை பொதுசெயலர் செ.முத்துசாமி மற்றும் மாநில நிர்வாகிகள் திரு க செல்வராஜ்(பொறுப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்களின் சிறந்த பணியும் சேவையும் தொடர )பொதுசெயலர்,திரு கு,சி.மணி தலைவர்,மற்றும் தே.அலெக்சாண்டர் மாநில் பொருளாளர் ஆகியோர் வாழ்த்துவதாகவும் தமது கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணினைச்சார்ந்த ஆசிரியர்கள் பலர் இவ்விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அதனை எண்ணி பெருமிதம் அடைவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விருதுபெ
தகவல்-கே.பி.ரக்ஷித்.மாநில துணைத்தலைவர்
|
Posted: 03 Sep 2015 06:12 PM PDT
பணி நிரந்தரம் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பகுதி நேர ஆசிரியர்கள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் திரட்டி வருவதால் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தமிழக பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசின் கவனத்துக்கு எடுத்து செல்லும் வகையில் கடந்த 31ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில்,
எந்தெந்த பகுதிகளில் யார்? யார்? பங்கேற்றனர் என உளவுத்துறை மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் தகவல்களை திரட்டி வருகிறது.
ஆர்ப்பாட்டம் நடந்த அன்று பள்ளிக்கு செல்லாத பகுதி ஆசிரியர்கள் பட்டியல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் கேட்டுள்ளதால், பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து பகுதி நேர ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்த அன்று பள்ளிக்கு செல்லாத பகுதி நேர ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து கோரி உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவே இந்த பெயர் பட்டியல் கேட்டுள்ளதாக கூறுகின்றனர்.
உடல்நிலை சரியில்லாமல், சொந்த விஷயங்களுக்காக விடுமுறையில் சென்றவர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்களும் பாதிக்கப்படுவர். எனவே முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
மெகா வசூலில் ஈடுபட முயற்சி
ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.5,000 லிருந்து ரூ.7,000மாக உயர்த்தப்பட்டது. அப்போது ஒருசில சங்க நிர்வாகிகள் ‘நாங்கள் சொல்லிதான் சம்பளம் உயர்ந்துள்ளது. மேலும், மேலிடத்தை கவனிக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு ஆசிரியரும் ரூ.1,500 முதல் ரூ.2,000 கொடுக்க வேண்டும். அப்போதுதான் பணி நிரந்தரம் கோரிக்கையை வைக்க முடியும்’ எனக்கூறி வசூல் வேட்டையில் ஈடுபட முயன்றனர். இதுதொடர்பாக புகார் எழவும் வசூல் வேட்டைக்கு தடை வந்தது. தற்போது பணி நிரந்தர கோரிக்கையை முன்வைத்து சிலர் மெகா வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
|
Posted: 03 Sep 2015 06:11 PM PDT
புதுடில்லி: விலங்குகளிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டது குஜராத் மாநிலம் தான். அங்கு தான் இம்முறை முதலில் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அம்மாநில அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. அதில், மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை
மாணவர்களுக்கு விலங்குகளிடம் கருணை செலுத்த வேண்டியது பற்றி வலியுறுத்த வேண்டும் எனவும், இதற்காக பிராணிகள் நலச்சங்கம் வகுத்து கொடுத்த பாடங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதையே நாடு முழுவதும் உள்ள தங்கள் பள்ளிகளிலும் கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. சண்டிகர், டில்லி, கோவா, கேரளா, அரியாணா, மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பிராணிகள் நலச்சங்க கல்வி ஒருங்கிணைப்பாளர் பூஜா மகாஜன் கூறும்போது, ''விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்லித் தந்தாலே மற்றவர்களிடமும் குழந்தைகள் அன்பு செலுத்த துவங்கிவிடுவர். வன்முறை கலாசாரம் ஒழியும்'' என்றார். இப்பாடத்திட்டத்தில் விலங்குகளின் முக்கியத்துவம், அன்பு செலுத்த வேண்டியதன் அவசியம், வீடியோ, புகைப்படங்கள், விலங்குகள் பற்றிய கதைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே பிராணிகள் நலச்சங்கம் தயாரித்துக்கொடுத்த பாடக் குறிப்புகள், நாடு முழுவதும் 25 ஆயிரம் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. 50 லட்சம் குழந்தைகளை இவை சென்றடைகின்றன.
|
Posted: 03 Sep 2015 06:08 PM PDT
2016-17ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எஸ்சி. அறிவியல் பட்டப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையையும் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. தொலைநிலைக் கல்வி வாயிலாக விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் தொடர்பான இளநிலை பட்டப் படிப்புகள் தொடங்கப்பட உள்ளன என தமிழக அரசின் உயர் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2015-16 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்புகளைத் தொலைநிலைக் கல்வி முறையில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரகாந்தி இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது : தொலைநிலை கல்வி முறையில் பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் படிப்புகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பல்கலைக்கழகத்தின் கல்வி வாரியக் குழு, ஆட்சிமன்றக் குழு ஆகியவற்றின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது.
இதில் இடம்பெறும் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் நேரடியாக மேற்கொள்ள வசதியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்படும்.
பிராக்டிக்கல் வகுப்புகளையும் அந்தக் கல்லூரியிலேயே மாணவர்கள் மேற்கொள்ளலாம்.
இதற்காக தமிழகத்தில் பல கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 2016-17 கல்வியாண்டு முதல் இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றார்.
யுஜிசி துணைத் தலைவர் எச். தேவராஜ் கூறுகையில்
ஏற்கனவே அடிப்படை அறிவியல் கல்வியை சில கல்வி நிறுவனங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் வழங்குவதாக தகவல்கள் வந்துள்ளன. அது சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் செய்முறை பயிற்சிகளை மாணவர்கள் முழுமையாகப் பெறுவது கடினம்.
இதற்கு யுஜிசி அனுமதி வழங்காது. இருந்தபோதும் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.
|
Posted: 03 Sep 2015 06:06 PM PDT
|
Posted: 03 Sep 2015 06:02 PM PDT
பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய அரசின் தொழிலாளர் நல ஆணையாளர் ஜோப்பிரின்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் பீடி, சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
உதவித்தொகை சம்பந்தமான தகவல்களையும், விண்ணப்பத்தையும், http://tirunelveli.nic.in./
|
Posted: 03 Sep 2015 05:46 PM PDT
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 16 கோடி கனஅடியாகக் குறைந்துள்ளதால், 2020- ல் கடல் நீர் பூமிக்குள் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 லட்சம் கிணறு கள், 39 லட்சம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 91 ஆயிரம் கிணறு கள், 6 லட்சத்து 21 ஆயிரம் ஆழ் துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றில் 60 சதவீத கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் தற்போது வறண்டுபோய் உள்ளன.
கடந்த 1998 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகால மழை அளவை ஒப்பிடும்போது, எதிர்பாராதவிதமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சிறப்பாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவித்தும், தற்போது 40 சதவீதம் மழை மட்டும் பெய்துள்ளது. இதேநிலை நீடித்தால், 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய வறட்சியை தமிழகம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டாகும் எனவும், அதற் குள் நிலத்தடி நீரை செறிவுபடுத் தாவிட்டால் விவசாயம் பொய்த்து விடும் நிலை ஏற்படக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் கூறியதாவது:
‘‘தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில், நிலத்தடி நீரின் அளவு 26.2 கோடி கனஅடியாக இருந்தது. 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பில் நிலத்தடி நீர் 16 கோடி கனஅடியாகக் குறைந் துள்ளது. மக்கள் தொகை பெருக் கத்தால், நீரின் தேவை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மேட்டுப் பகுதிகள் நிலத்தடி நீரை இழந்து வருகின்றன. ஆற்றின் கரையோரங்களில் ஒருசில பகுதி களில் மட்டும் நீர்வளம் உள்ளது.
மூடாமல் விடப்படும் குவாரி பள்ளங்கள் மற்றும் அந்த பகுதியின் நிலத்தடி நீர், பூமிக்குள் உட்புக முடியாமல் உள்ளன. அதனால், குவாரியை சுற்றியுள்ள பகுதிகள் நாளடைவில் நீர்வளத்தை இழக்கின் றன. குவாரிக்கான தேவை முடிந்த பின், அவற்றை தோண்டப்பட்ட மணலைக் கொண்டு மூடிவிட வேண்டும். பெரும்பாலான குவாரி கள், மூடப்படாமல் உள்ளன.
உலக சுகாதார நிறுவன கணக் கெடுப்பின்படி, தனி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 135 முதல் 155 லிட்டர் நீர் தேவை. ஆனால், 75 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 260 முதல் 300 லிட்டர் நீரை பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 25 சதவீதம் பேருக்கு 40 லிட்டருக்கும் குறைவான தண்ணீரே கிடைக்கிறது.
ஊற்று என்பது 2 இன்ச் இடை வெளியில் 60 கி.மீ. நீளத்துக்கு பரவியிருக்கும் ஒரு அமைப்பு. ஒவ் வொரு பகுதியிலும் குறைந்தபட்சம் 6 முதல் 8 நீர் ஊற்றுகள் தரை யின் கீழ் உள்ளன. குடிநீர் மோட்டார் பயன்பாடு அதிகரிப்பால் ஊற்று தண்ணீர் அதிக அளவு உறிஞ்சப்படுகிறது. மக்களிடம் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு இல்லாததால், மீண்டும் நீர்ச்செறிவு ஏற்படுவதில்லை. அதனால், விவ சாயத்தில் பெரிய தேக்கத்தை காண முடிகிறது. குடிநீருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.’’
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சாலைகளில் மழைநீர் சேகரிப்பு
நீர் சேமிப்பு குறித்து பிரிட்டோ ராஜ் கூறும்போது,
‘‘5 ஏக்கர் நிலப் பரப்பு கொண்ட ஒரு கிராமத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு இன்ச் அளவு மழை பெய்தால், அந்த கிராமத்துக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.
இன்று சாலைகள் தார் மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட்டுவிட்டன. அதனால், தண்ணீர் பூமிக்குள் புகுந்து செறிவூட்ட வசதியின்றி, பள்ளங் களை நோக்கி ஓடி ஊருக்கு பலனில்லாத இடங்களில் சேகர மாகிறது. வெளிநாடுகளைப் போல் தார் சாலையின் இருபுறங்களிலும் வழிந்தோடும் நீரை சேகரிக் கும் அமைப்புகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண் டும்.
சாலையின் இரு புறங்களிலும் 6 அடி நீளம், 4 அடி அகலத்தில், சுமார் 5 முதல் 6 அடி ஆழம் கொண்ட குழிகளை அமைத்து சிமெண்ட் பலகை, மூடிகள் கொண்ட மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதில் 5 அடி வரை 60 மில்லி மீட்டர், 20 மில்லி மீட்டர் எடை கொண்ட ஜல்லிக் கற்களை நிரப்பி, மேல் பகுதியில் ஒரு அடி இடைவெளி விட்டால் அதன் வழியாக மழைநீர் விழுந்து சேகரிக்கப்படும். இவ்வாறு செய்தால் வறட்சியில் இருந்து தமிழகத்தை காப்பாற்றலாம்’’.
இவ்வாறு பிரிட்டோ ராஜ் கூறினார்.
|
Posted: 03 Sep 2015 05:45 PM PDT
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை இந்திய அஞ்சல் துறை தொடங்கவுள்ளது.
இது தொடர்பாக அஞ்சல் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அத்திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,
ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்து வந்தன.
அதனை மனதில் கொண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்களில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்கும் வகையில் ‘பொன்மகன் பொது வைப்பு நிதி’ என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடு பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். இந்த கணக்கின் மூலம் கிடைக்கப்படும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு.
இந்த வைப்புநிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் முன் பணம் செலுத்தலாம். இதில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு. பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் தொடக்க விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் செப்டம்பர் 4-ம் தேதி நடக்கவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
|
Subscribe to:
Posts (Atom)