பிராவிடண்ட் பண்டு சந்தாதாரர்களுக்கு என பிரத்யேகமாக புதியமொபைல் அப்ளிகேஷன் ஒன்றை மத்திய மந்திரி மந்தாருதத்தாத்ரேயா
இன்று துவங்கி வைத்தார். இதன் மூலம், எஸ்.எம்.எஸ். வழியாகயூ.ஏ.என். நம்பரை ஆக்டிவேஷன் செய்வது, மிஸ்டு கால் வழியாக
ஆக்டிவேட் செய்வது ஆகிய சேவைகளை பெறலாம். மேலும்,சந்தாதாரர்கள் மாதந்தோறும் தங்கள் கணக்குகளின் விபரங்களைமொபைல் வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.
இதுதவிர, ஈ.பி.எப். பென்சன் பெறுபவர்கள் பென்சன் விபரங்களை
மொபைலிலேயே அறிந்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன்வாயிலாக சந்தாதாரர்கள் தங்களது பி.எப். இருப்பு தொகையையும்தெரிந்து
கொள்ளலாம். இந்த புதிய வசதியின் வாயிலாக 3.54 கோடிபி.எப்.
சந்தாதாரர்கள் பயன்பெறுவார்கள்.
49.22 லட்சம் பென்சன்தாரர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒருவசதியாக இருக்கும். அதேபோல், 6.1 லட்சம் நிறுவனங்களுக்கும் இதுபயனுள்ளதாக இருக்கும் என
மத்திய மந்திரி தத்தாத்ரேயாதெரிவித்தார். இந்த அப்ளிகேஷனை
இ.பி.எப்.ஓ. இணையதளத்தில்இருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment