சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐசமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன்வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது




தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/-வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊனத்தின் அளவு 60 சதவீதத்திலிருந்து40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 40 சதவிகிதத்திற்குமேல் ஊனம் இருந்தாலே இனிமேல் உதவித்தொகை வழங்கப்படும்என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் இல்லாதவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ்உள்ளவராகவும், குடும்ப சொத்து மதிப்பு ரூ.50,000-க்கு குறைவாகஇருக்க வேண்டும், குடும்பத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் வாரிசுஇருக்க கூடாது என்பது உள்ளடக்கிய ஆதரவற்றோராக இருக்கவேண்டும் என்ற விதி மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி, பணிஇல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகைவழங்கப்படும் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பெயர் மாற்றம்
சமூக பாதுகாப்பு திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஆதரவற்றமாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்பதைமாற்றி, மாற்றுத்தினாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்றுஇனிமேல் அழைக்கப்படும் என்றும் அரசாணையில்
No comments:
Post a Comment