பள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய விரும்புவோர்
இனிமேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிபார்த்துக் கொள்ள
அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில்
அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில்
வழங்கப்படும் மதிப்பெண் பட்டியல்கள் அனைத்து அரசுப் பணிக்கும்,
தனியார் பணிக்கும் அடிப்படையாக உள்ளன. பணியில் சேரும் எந்த
நபரும் தங்கள் உண்மை சான்றுகளை பணி வழங்கும் நிறுவனங்களில்
சமர்ப்பிக்க வேண்டும். பணி வழங்கும் நிறுவனம் அந்த சான்றுகளின்
உண்மைத் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட தேர்வுத்துறைக்கு அனுப்பி
வைக்கும். இதை ஏற்று பணி நாடுவோர் நிறுவனங்களுக்கு கொடுத்த
சான்றுகள் உண்மையானவையா இல்லையா என்பது குறித்து தேர்வுத் துறை
ஆய்வு செய்து சான்று வழங்கும். இந்த சான்றுகளை அந்தந்த
நிறுவனங்களே தேர்வுத்துறைக்கு நேரடியாக அனுப்பி நேரடியாகவே பதில்
பெறுவார்கள்.
No comments:
Post a Comment