08 August 2015



அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல் பணி நியமனம் செய்யும் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், ஆய்வு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு விரும்பினால், தற்போது இந்த உத்தரவில் பரிந்துரைத்துள்ள ஏதேனும் ஒரு முறைப்படி பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பி.சதீஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.

அதில் ஐந்து நபருக்கு ஒருவர் என்ற விகிதத்தின் அடிப்படையிலும், நேர்காணலின்போது பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலும் பணியிடம் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
 இந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செய்யும் முறையில் கடுமையான முரண்பாடுகள் உள்ளன. இது சட்ட உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்தத் தேர்வு நடைமுறை அரசு வெளியிட்ட முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக உள்ளது.

இந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 31-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. எனவே, பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். மேலும், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரினார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4, குரூப்-2 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை மட்டுமே நடத்தி பணி நியமனம் செய்கிறது. இத்தேர்வு விடைத்தாள் கணினி மூலம் மதிப்பீடு செய்யப்படுவதால் இத்தேர்வு நியாயமாகவும், வெளிப்படையாகவும் உள்ளது.

எனவே, அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் போன்ற கீழ்நிலைப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி நேரம், சக்தி போன்றவற்றை அரசு செலவிட தேவையில்லை. எனவே, அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனத்தின்போது எழுத்துத் தேர்வு மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்க வேண்டும். 

அப்போது எழுத்துத் தேர்வு மதிப்பெண் 150 உடன், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண், உயர் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண், பணி முன் அனுபவத்துக்கு 2 மதிப்பெண் என மொத்தம் 167 மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். அல்லது அதற்கு மாற்றாக நேர்முகத் தேர்வுக்கு 8 மதிப்பெண்களைச் சேர்த்து மொத்தம் 175 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இந்தத்தேர்வைப் பொருத்தவரை, எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கில் கொள்ளாத தேர்வு நடைமுறைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு விரும்பினால், தற்போது இந்த உத்தரவில் பரிந்துரைத்துள்ள ஏதேனும் ஒரு முறைப்படி பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்ற
கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டத்தில் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்த, 100க்கும் மேற்பட்டஆசிரியர்களின் விண்ணப்பங்கள், இறுதி நாளில் நிராகரிக்கப்பட்டதால், சர்ச்சை ஏற்பட்டது. நடப்பு கல்வியாண்டிற்கான,
பொது மாறுதல் கலந்தாய்வு, வரும் 12முதல் ௨௯ம் தேதி வரை நடக்கின்றன. இதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்றுஇறுதி நாள்.
இந்நிலையில், கோவை உட்பட பிற மாவட்டங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால், கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர்
அந்த பள்ளியில் குறைந்தபட்சம், மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு, 2012 ஜூன் முதல் தேதி, தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, குறைந்தபட்சம் ஒரு கல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. புதிய விதிமுறைப்படி, 2014 ஜூன் முதல் தேதிதகுதி நாளாக அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கடந்தாண்டு, ஜூலை 23ம் தேதி தான்ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஓராண்டுகளாக விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருந்தாலும், இரண்டு ஆண்டுகள் பணி புரிந்துள்ளவர்கள் மட்டுமே, இக்கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.


இந்நிலையில், கோவையில் நேற்று இடமாறுதல் வேண்டி ஆசிரியர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. சில ஆசிரியர்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சர்ச்சை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு காலதாமதமாக கலந்தாய்வு நடத்தியதற்கு ஆசிரியர்கள் எப்படி பொறுப்பேற்க இயலும்? ஜூலை மாதம் கலந்தாய்வு நடத்தி விட்டு, ஜூன், 1ம் தேதியை தகுதி நாளாக அறிவித்துள்ளது சரியல்ல. இதனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2010ல் அரசு உத்தரவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்தனர். மே மாதம் கலந்தாய்வுக்கான உத்தரவு பெற்றிருப்பினும், புதிய பள்ளிகளில் ஆக., 2ம் தேதி பணியில் சேர்ந்தோம். 2011ம் ஆண்டிற்கான கலந்தாய்வில், ஆக., 2ல் பணியில் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என, விதிமுறையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

'விதிமுறைப்படி தான் பணி'

மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு) கீதா கூறுகையில், ''கலந்தாய்வு விண்ணப்பங்கள் பெறும் பணி தற்போது நடந்துவருகிறது. முழுமையாக பணி முடிந்த பின்பே, நிராகரித்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையை தெளிவாக தெரிவிக்க இயலும்.அரசு விதிமுறைப்படி, ஓராண்டுகள் நிறைவடையாவிடில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விதிமுறைகளின் படி பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.

எழுத்துத் தேர்வை கருத்தில் கொள்ளாமல் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட முடிவுக்கு உயர்நீதிமன்றம்
இடைக்காலத் தடை விதித்துள்ளது.

எழுத்துத் தேர்வு மதிப்பெண், கல்வித் தகுதி மதிப்பெண் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் வெயிட்டேஜ் அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment