26 December 2015

ஜன., 18 முதல் 2ம் பருவ தேர்வு


தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரைஜன., 18 முதல்,இரண்டாம் பருவ தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சமச்சீர்கல்வி பாட திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்குஅரையாண்டுதேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள்ஜனவரிக்கு தள்ளி
வைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறைக்கு பின்ஜன., 2ல் பள்ளிகள்திறந்ததும்பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்குஜன., 11 முதல், 27 வரை,தேர்வுகள் நடக்க உள்ளன.இத்துடன், 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1வகுப்புக்குஜன., 11 முதல், 27ம் தேதிக்குள் தேர்வை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளதுமற்ற வகுப்புகளுக்குஇரண்டாம் பருவதேர்வைஜன., 18 முதல், 27 வரை நடத்தலாம் எனபள்ளிக்கல்விதுறை அதிகாரி கள் அறிவுறுத்தியுள்ளனர்.மேலும்விடுமுறை முடிந்துபள்ளிகள் திறக்கும் போதுஅனைத்து மாணவர்களுக்கும்மூன்றாம்பருவ புத்தகங்களை வழங்க வேண்டும் எனவும்அதிகாரிகள்உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment