பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு
வெளியிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச்
சீர்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர் அனிதா ப்ரவீன்
அனைத்துத் துறை செயலாளர்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட
வற்றுக்குஅனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசுப் பணியில் நிரந்தரமாக பணியாற்றும் இளம்
தாய்மார்களுக்குஆறு மாத கால மகப்பேறு விடுப்பு
அளிக்கப்படுகிறது. அவர்களுக்குஇரண்டு குழந்தைகளுக்கு
குறைவாக இருந்தால் இந்த விடுப்பினைப்பெற தகுதி
படைத்தவர்கள். தாற்காலிகமாக பணியாற்றுவோருக்கும்
நிபந்தனைகள் அடிப்படையில் விடுப்பு அளிக்கப்படுகிறது
. மகப்பேறுகாலத்தில் பாதிப்பு ஏற்பட்டு கரு கலைந்தால்,
அவர்களுக்குசராசரியான ஊதியத்துடன் ஆறு வாரங்களுக்கு
மகப்பேறு விடுப்புஅளிக்கப்படும்.
இந்த விடுப்புக் காலம் என்பது குறைந்தபட்சம் 12 வாரங்களுக்கும்
அதிகபட்சம் 20 வாரங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
குழந்தைகள் பிறக்கும் போதே இறந்திருந்தால்,
அத்தகையதாய்மார்களுக்கு 90 நாள்கள் வரை மகப்பேறு விடுப்பு
அளிக்கப்படும்.எனவே, இத்தகைய தன்மைகளில் மகப்பேறு
விடுப்புகளை துறைத்தலைவர்கள் அளிக்கலாம். மகப்பேறு
விடுப்பு தொடர்பாக பல்வேறுமுரண்பாடான கருத்துகள்
கேட்கப்பட்டுக் கொண்டே இருந்ததால் இந்தவழிகாட்டு
நெறிமுறைகள் வெளியிடப்படுவதாக அனிதா
ப்ரவீன்தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment