22 September 2014

கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் பயிற்சிப் பணிமனையில் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்கள் பேசியது என்ன?


                                      
கல்விசெயலர் திருமதி சபிதா அவர்களை SCERT இயக்குனர்
வரவேற்று ,ECS ,Digital lessons பற்றிய சில நடைமுறைகளை சுருங்கக்கூறி அமர
செயலர் அவர்கள் ஆசிரியர்களிடையே ஆசிரியர்களுக்காக
உரையாற்றினார்….

“ பள்ளிக்கல்வி முதன்மைச் செயலரின் உரை மிக நேர்த்தியாக
இருந்ததுஆசிரியர்களை உற்சாகப்படுத்துவதாகவும்செயலில்
இறங்கும் ஆற்றலைத் தருவதாகவும் இருந்தது.

பள்ளிக் கல்வித் துறைக்கென ஒரு தனி server இல்லாதது கண்டு
எனக்கு வருத்தமாக இருந்ததுஆகவே மாண்புமிகு முதல்வர்
அவர்களிடம் இந்த செய்தியைக் கொண்டு சேர்த்து,அனுமதி
பெற்றேன்.DATA BASE தகவல் முறைமைத் திட்டம் (EMIS) ,வழியாகஅனைத்துப் பள்ளிக் கல்வித் துறைகளையும் 
இணைப்பதற்கான(Integration of School Educational Departments) முயற்சி இதுமுதல்முயற்சியாக நம் தமிழகத்தின் 
அனைத்து ஆசிரியர்கள்,குழந்தைகள்,பள்ளிகளின் விவரங்கள் 
பதிவு செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே நம் (ICT Award) விருது பெற்ற ஆசிரியர்களின் துணையும்கொண்டு அடுத்த ECS ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ECS-இன் தேவை
ஒரு சிலருக்குப் பேசினால் புரியும்,சிலருக்கு வரைந்தால்புரியும்..
எல்லோருடைய புரிந்துகொள்ளலும் ஒரே மாதிரியாகஇல்லை.
சில விஷயங்களை ஒலி-ஒளி மூலம் காட்டினால் உடனேகிரகித்துக்கொள்வார்கள்அதை 
அவர்கள் வாழ்வில் மறக்கவேமாட்டார்கள்.
பாடப் புத்தகங்களைத் தாண்டிநம்மிடம் கல்வித்
தொலைக்காட்சிப்படப்பதிவு நிலையம்(EDU TV STUDIO),பல்வேறு கல்விசெயற்கைக்கோள் இணைப்புகள்(EDU-SAT) செலவின்றிகிடைக்கின்றன.ஆனால் நாம் பயன்படுத்திக் 
கொள்வதில்லை.இதுதவிர அண்ணா பல்கலைக்கழகத்திலும் 
நமக்கு ஒரு நிலையம்உள்ளது.அதைப் பார்க்க ஏற்பாடு 
செய்யப்பட்டுள்ளது.PART –II Schemeஇல் இதற்கான நிதியுதவி ஒதுக்கிமுதலில் SCERT கடிதம் 
அனுப்பியது.

பல தனியார் நிறுவனங்கள் என்னை அணுகினஆனால் நான் 
அதைஏற்றுக்கொள்ளவில்லை.ஏனெனில் ,நமது அரசுப் பள்ளி
ஆசிரியர்களைத் தவிர்த்து யாராலும் இதை சரியாகச்
 செய்யமுடியாது.உங்களைவிடக் குழந்தைகளை யாராலும் 
புரிந்து கொள்ள முடியாது.பாடநூல்களை மிகச் சரியாக 
குழந்தைகளிடம் சேர்க்க அவர்களால்மட்டும்தான் முடியும்.

நீங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு காணொலித் தகடும்(CD) 
மதிப்பீடுசெய்யப்படும்.பாடப்பொருள் (CONTENT), பாடத்திட்ட
வரைவு (Syllabus)சார்ந்தும்,எளிதில் மாணவர் புரிந்து கொள்ளும் 
விதத்திலும் மதிப்பீடுசெய்யப்படும்.

இவற்றைத் தயார் செய்யும்போது வகுப்பு,பாடம்பாடப்பொருள்
ஆகியவை தெளிவாக இருக்கவேண்டும்தர்க்கரீதியாக சரியாக
(Logic)இருக்க வேண்டும்.அது மிக முக்கியம்.இவற்றையெல்லாம்
 உங்கள்மனதில் கொண்டு உருவாக்கினால் அதுவே மிகநல்ல 
வளமாகஇருக்கும்.

கற்பனை செய்து பாருங்கள்,எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு
ஆசிரியராக நீங்கள் தயாரிக்கும் DIGITAL RESOURCE உலகம்முழுமைக்கும் உங்களை அடையாளப்படுத்தும்,
அந்த வாய்ப்பைஇந்தப் பயிற்சி தரும்பயிற்சி என்றுகூட 
சொல்லக்கூடாது, ORIENTATION எனலாம்.நான் ICT –AWARD க்காக என்னிடம் ஆசிரியர்கள்வருவார்கள்.அவர்கள் 
செய்துள்ளவற்றைப் பார்க்கும்போதெல்லாம்அதிசயமாக 
இருக்கும்,அவ்வளவு நல்லாப் பண்ணுவாங்க நம்மடீச்சர்ஸ்.

எங்களுக்குத் தேவை …Simplicity, Sincerity, Dedicative that’s all. அதிகமாகஉயர் வகுப்புகளுக்கான E-Content தயார் செய்ய வேண்டும் . நிறையDIETs இருக்கு.
அவர்களோடு நீங்கள் இணைந்து பணியாற்றி 3மாதங்களுக்குள்
இப்போதைய பணியின் முதல் தொகுப்பாக உங்கள்
வளங்களைத் தர வேண்டும்.WISH YOU ALL THE BEST”….

இவை நமது கல்விச் செயலர் நமக்காகப் பேசியவை,
எவ்வளவுநம்பிக்கையோடு வெளிப்படையாகப் பாராட்டினார்
அவ்வளவுசந்தோஷம் நம் ஆசிரியர்களுக்கும்… நம்மை 
வாழ்த்திவிட்டுவிடைபெற்றுவிட்டார் கல்விச் செயலர்.

No comments:

Post a Comment